Wednesday, June 11, 2008

தக்காளி பொரிச்ச குழம்பு

தேவையான பொருள்கள் :

நாட்டு தக்காளி - 1/4 கிலோ
சிறிய வெங்காயம் - 100 கிராம்
தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
புளி - கொஞ்சம்
மிளகாய் பொடி - 3 ஸ்பூன்
தனியா பொடி - 1 ஸ்பூன்
வெந்தய பொடி - கொஞ்சம்
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
கல் உப்பு - தேவையானது
மிளகு 1 ஸ்பூன், சீரகம் - 1/4 ஸ்பூன்

செய்முறை :

தேங்காய் துருவலுடன் மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு பொரிந்ததும் தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும். மஞ்சள்பொடி, மிளகாய்தூள், தனியாதூள்,உப்பு போட்டு வதக்கவும். புளியை கெட்டியாக கரைத்து ஊற்றவும். இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சுண்டவிட்டு, அரைத்த தேங்காய் கலவையை ஊற்றி கொதிக்கும் போது இறக்கி விடவும். உறவினர்கள் வந்த சமயத்தில் சீக்கிரமாக இந்த குழம்பை செய்து விடலாம்.மேலே கறிவேப்பிலை, மல்லி போடவும்.பொரிச்ச குழம்பு ரெடி.

No comments:

Post a Comment